Mon. Jun 30th, 2025

டிரேடிங் மூலம் 77 லட்சம் மோசடி – நான்கு பேர் கைது

திருப்பூர் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று 4 பேரை கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “சமூக வலைதளமான, இன்ஸ்டா கிராமில் டிரேடிங் சம்பந்தமான விளம்பரத்தை பார்த்ததாகவும், அதனை நம்பி அவர்களை தொடர்பு கொண்டபோது, வாட்ஸ்-அப் தன்னை இணைத்துவிட்டதாகவும், அதில் சில லிங்குகளை அனுப்பி வைத்தனர்.
அவற்றை திறந்த நிலையில், அங்கு பரிந்துரைக்கப்பட்ட டிரேடிங்கில் பல தவணைகளில் ரூ.77 லட்சத்து 55 ஆயிரத்து 545ஐ முதலீடு செய்தேன். பிறகு அவர்கள் கூறியது போல், எனக்கு எந்த அதிக லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து நான் ஏமாற்றப்படுவதை உணர்ந்தேன். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்

விசாரணை பேரில் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டம்
செய்தியாளர் வெ.முத்துப்பாண்டி

Related Post