நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த முகாம் குறிப்பன்குளம் , சின்னமாடன்குடியிருப்பு, கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம்,
வாழையடி, நாசரேத் ரோஜாப்பூ தெரு, முதலைமொழி, வைத்தியலிங்கபுரம், மேலவெள்ளமடம்
பிள்ளையன்மனை, உடையார்குளம், மணிநகர், நாசரேத் கஸ்பா தொடக்கப்பள்ளி, வகுத்தான்குப்பம்,
நாசரேத் மதுரம் நடுநிலைப்பள்ளி,
நாசரேத் பேருந்து நிலையம் ஆகிய 16 இடங்களில் நடந்தது.
இதில் சுமார் 1160 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் ஞானராஜ்நகர், பிரகாசபுரம், வெள்ளரிக்காயூரணி, மூக்குப்பீறி, கச்சனாவிளை, புறையூர், இடையன்விளை, நாலுமாவடி, திருமலர்புரம், பணிக்கநாடார்குடியிருப்பு, சுந்தர்ராஜபுரம் ஆகிய 12 இடங்களில் நடந்தது.
இதில் சுமார் 800 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை டாக்டர் சோனியா தொடங்கி வைத்தார்.


