நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மற்றும் ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மன்னார்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளார் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியை சகாய ஆஞ்சலா வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும், பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் ஆசியுரை வழங்கினார்.
மாணவ_ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ஆசிரியை ஜோஸ்பின் தொகுத்து வழங்கினார்.இதில் கச்சனாவிளை அருட்சகோதரிகள் ரஞ்சிதம், மெல்வின் மற்றும் பெற்றோர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.செல்வ சஞ்சனா நன்றி கூறினார்.


