Mon. Jun 30th, 2025

நாசரேத் பகுதியில் சாலை பழுது பார்க்கப் படுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நாசரேத் – வைத்தியலிங்கபுரம் – அம்பலச்சேரி சாலையில் பிடாநேரி சிப்காட் அமைந்துள்ளது. சிப்காட் அமைப்பதற்காக நாசரேத் அம்பலசேரி சாலையை இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது. மேற்படி சாலையில் உள்ள பாலங்களும் புதிதாக கட்டப்பட்டது. தற்போது மேற்படிச் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலங்கள் பழுதடைந்துள்ளது.பழுதடைந்துள்ள பாலங்களினால் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக பழுதடைந்துள்ள பாலங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post