Thu. Jan 15th, 2026

கொலை வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி எஸ்.சி/எஸ். டி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரையாண்டி மகன் ஆறுமுகராஜா (43/2015) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்தவர்களான வடிவு மகன் காசி (42/2025), கந்தையா மகன் இசக்கிமுத்து (36/2025), சொக்கலிங்கம் மகன் தளவாய் (45/2025), முத்துப்பாண்டி மகன் சிவா என்ற சிவலிங்கம் (34/2025) மற்றும் பேச்சிபாண்டி மகன் துரைமுத்து ஆகிய எதிரிகள் கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் செயல்பட்ட தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆறுமுகராஜாவை பழைய வழக்கை வாபஸ் பெறாததால் அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் SC/ST மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார் .

மேற்படி 2 வழக்குகளின் விசாரணை தூத்துக்குடி SC/ST சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வர்கிஸ்குமார் இன்று (24.12.2025) மேற்படி குற்றவாளிகளில் துரைமுத்து உயிரிழந்த நிலையில் மற்ற எதிரிகளான இசக்கிமுத்து, தளவாய், சிவா என்ற சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா மூன்று ஆயுள்தண்டனை, தலா ரூபாய் 13,000/- அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரூபாய் 7,000/- அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 12,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தற்போது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post