Sun. Jun 29th, 2025

சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் ஊரில் உள்ள அமராவதி குளத்தில் சாத்தான்குளம் அருகில் உள்ள பண்டாரபுரம், விஜயனூர், விஜயராமபுரம், கிராமங்களில் பெய்யும் மழைநீர் சேமிக்கப்பட்டு விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அமராவதி குளத்தில் சேமிக்கப்படும் மழை நீரால் சாத்தான்குளத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் சப்ளை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது.

சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் அமராவதி குளத்தின் கிழக்குப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. பத்து மாதங்களுக்கு மேலாகியும் உடைந்த கரைகளை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் விவசாயிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக உடைந்த கரைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post