மாறு…
மாற்று….
வைராக்கியம்
கொள்….
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை…
மனதில் நிறுத்துங்கள்!
ஒருவரால் நீ தூக்கி எறியபட்டால் ஒருபோதும் துவண்டு விடாதே!
குப்பை என நினைத்து எறிந்தவனுக்கு
நீ! கோவில் சிற்பம் என்று நிரூபி!
அவள் பெயர் இனியா. இனியா பிறக்கும் போதே இறப்பு என்னும் சகாப்தத்தை சந்தித்து உயிர் பெற்றவள் ஆவாள்.
அவளுக்கென்று எதையும் எடுத்து கொள்ளாத பிள்ளை மனம் கொண்டவள்.

மறவமங்கலம், சிவகங்கை
அப்பேதை அதனாலையோ என்னவோ, அவள் வாழ்கையானது அவளுக்கு கொடுத்த பரிசு கண்ணீர்.
இதுவரை அவள் வாழ்வில் எவன் ஒருவனையும் விரும்பாத மனம், மாப்பிள்ளையாக வந்தவனிடம் மனதை பறி கொடுத்தாள்.
மங்கை அவள் முதல் காதலும் முடிவில்லா காதலும் அவனுக்கு மட்டுமே உரியது என இருந்தாள்.
பாவம் அப்பேதைக்கு தெரியவில்லை இனிமேல் தான் அவள் வாழ்வில் துன்பக்கடலுக்குள் மூழ்க போகிறாள் என்று.
திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்தாள் இனியா.
ஒரு வருட காலம் உருண்டோடியது. அவள் கருவுற்று 10 மாதங்கள் முழுமை பெற ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தாள்.
அக்குழந்தைக்கு மகிழன் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
இருவரும் அளப்பரியா காதலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
மகிழன் பிறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அவள் வாழ்வில் ஒரு புயல் உருவாகியது.
இனியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டது….
என்ன நடந்தது?
மகிழனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அவள் கணவரின் குடும்பத்தாரின் முகத் திரையை தோலுரித்து காட்டியது
இனியாவின் மாமியாரின் வீண் பிடிவாதத்தால் மகிழன் உயிர் இனியாவின் மடியிலேயே பிரிந்தது.
அவள் 6 மாத காலம் வரை அவளின் குழந்தை இறந்தது தெரியாமல் பித்து பிடித்தவள் போல் இருந்தாள்.
மகிழன் இழப்பில் இருந்து இனியா மெல்ல மெல்ல வெளி வரும் வேளையில், அவள் கணவன் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி விட்டு, பிரிந்து செல்ல முடிவெடுத்தான்.
அவனே உலகமென்று இருந்த அப்பேதைக்கு அவள் நெஞ்சில் கூர்மையான கத்தியை இறக்கியது போல் வலி.
அவள் கண்களில் நீர் வழிய அவள் வாழ்வே இருள் மயமானது!
சிந்திக்க ஆரம்பித்தாள்?
செய்யாத தவறுகளுக்கு எதற்கு அவளுக்கு இத்தனை தண்டனைகள்?
இத்தனை ஆண்டு காலம் துர்க்கையாக இருந்த அவள் திரௌபதியாக வேள்வித்தீயில் இருந்து வரும் வெளிச்சம் போல் உருவெடுத்தாள்
வீர மங்கையாக
ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சென்றாள்
அங்கு தான் அவள் வாழ்வில் புது உறவுகள் புது மாற்றங்கள் நிகழ தொடங்கின
இனியாவின் கண் முன்னே ஒரு அதிசயம்… அவள் தொலைத்த பொக்கிஷம் பால் மனம் மாறாத அவன் முகத்தில் இனியாவின் குழந்தையின் சாயலை கண்டாள்.
அச்சிறுவனின் பெயர் முகிலன். அவன் பிறந்த தேதியும் இவள் மகன் இறந்த தேதியும் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றாள்
அச்சிறுவன் அவளை அம்மா என அழைத்ததும், அவளை அறியாமல் கண்களில் நீர் வழிய அவளுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
அன்றிலிருந்து அவள் தன் மகன் தன்னிடம் வந்து விட்டான் என்று வாழ்வை மீண்டும் அவள் புன்னகைத்து வாழ ஆரம்பித்தாள்
அந்த பள்ளியில் கிடைத்த பொக்கிஷங்கள். பல தாய் தந்தைக்கு இனையான உடன்பிறவா சகோதரர்கள் கிடைத்தனர்
அவளுக்கு ஒரு ஆருயிர் தோழியும் கிடைத்தாள்.
அவளை சுற்றி ஒரு புது உலகம் உருவாகி உள்ளதை நினைத்து மீண்டும் புது பொலிவுடன் உயிர்த்தெழுந்து அவள் மகிழ்ச்சியுடன் வாழ தொடங்கி விட்டாள்……
மானிடரே!
எச்சரிக்கையாக இருங்கள்…….
விழுந்த இடத்தில்
வேறூன்றி எழுந்து நிற்பாள் வீர மங்கை
உன்னை குத்திக் கிழிக்கும் ஆயுதமாக………
முற்றும்.