Mon. Sep 16th, 2024

சாலைபுதூர் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்.

சாத்தான்குளம்  அருகே உள்ள சாலைபுதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில்  பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்  புதன்கிழமை  நடைபெற்றது.

சாத்தான்குளம்  அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி  தலைமை  வகித்து போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மாணவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்  என பேசினார்.

மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி   தலைமை ஆசிரியர்  பிரான்சிஸ் சேவியர் ராஜ்  நன்றி  கூறினார்.

Related Post