நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அதிகபட்சமாக 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.
நாசரேத் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு ஆரம்பமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலை குமார் அனைவரையும் வரவேற்றார்.
இம் முகாமில் 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். மனுக்களுக்கு முகாமிலேயே உடனடியாக தீர்வு காணப்பட்டது. விண்ணப்பம் அளிக்க வந்தவர்களுக்கு வரிசையாக டோக்கன்கள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு திருச்செந்தூர் மின் செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் தலைமையில்
உதவி பொறியாளர்கள் ராம் மோகன், சாயி ஹரிஹர கிருஷ்ணன், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மொத்தம் 494 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 325 மகளிர் உரிமைத் தொகைக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் ஏரல் தாசில்தார் செல்வகுமார், ஆழ்வார்திருநகரி வருவாய் ஆய்வாளர் ஆண்டாள், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன், மிக்கேல் ஜெரோசின், முத்துமாலை ,பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, ஸ்டெல்லா, ஐஜினஸ்குமார், ரதி, ஜெயா, சவுந்திரம், பெனிட்ரோ தினகரன், ரவீந்திரன்,பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கிராம அலுவலர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655