spot_img
22.3 C
New York
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்  வழியாக வேளாங்கண்ணிக்கு பேருந்து வசதி

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் ஏரல் வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் வேளாங்கண்ணிக்கு நேரடி பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை

சாத்தான்குளம் நாசரேத் ஏரல் பகுதி மக்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் வேலையின் நிமித்தம் தினசரி ராமநாதபுரம் மாவட்டம் சென்று பணிபுரியும் நிலையில் நேரடி பேருந்து சேவை இல்லாத காரணத்தால் தூத்துக்குடி சென்று பின்னர் மாற்று பேருந்து மூலம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் நேர விரயம் மற்றும் இடம் கிடைக்காமலும் அவதிக்குள்ளாகின்றனர்

ஆதலால் பொதுமக்களின் வசதிக்காக தூத்துக்குடி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரடி பேருந்து சேவை செய்து தரும்படி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் வழியாக வேளாங்கண்ணிக்கு  புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்