ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் ஆலயத்தை சுற்றி வரும் தேர்ப்பவனி நடைபெற்றது.
இதில், கடலோரப்பகுதிகளை சேர்ந்த மக்கள், கிராமமக்கள் தங்களது குடும்பத்தினருடன் திரளாக வந்து புனித சந்தியாகப்பரை வழிபட்டு மகிழ்ந்தனர்.
விழாவினை முன்னிட்டு ஸ்ரீவை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


