Sun. Jun 29th, 2025

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினர் காலவரையரையற்ற காத்திருப்பு போராட்டம்

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினர் காலவரையரையற்ற காத்திருப்பு போராட்டம் காரணமாக அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்தது.l

வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவல நிலையை கண்டித்தும் பணியிடங்களை பாதுகாத்திடவும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் காத்திருக்கும் போராட்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்து வருகிறது .

சாத்தான்குளம் வட்டத் தலைவர் வைகுண்டப்பட்டு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் துரை முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி செல்வ சுதர்சன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தில் தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரும் கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டத்தினால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு பணிகள் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post