






சாத்தான்குளம் இராம கோபாலகிருஷ்ணர் அரசு முழு நேர கிளை நூலக இரு பெரு விழா வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஓ சு நடராசன் தலைமையில் நடைபெற்றது.
சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசுக் கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா மற்றும் சீர்காழி இராமாமிர்தம் அரங்கநாதன் நல் நூலகர் விருது பெற்ற திருமதி அன்னாள் ஜெயந்தி பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலர் திரு மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நல் நூலகர் திரு சுப்பிரமணியன் வரவேற்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் திரு பொன் முத்து ரூபாய் 1000 செலுத்தி புரவலராக தம்மை இணைத்துக் கொண்டார்.
இவ்விழாவில் வர்த்தக சங்கச் செயலாளர் திரு மதுரம் செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு அ.பாலகிருஷ்ணன் வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் திரு பொன் முருகானந்தம் வக்கீல் வேணுகோபால் நல் நூலகர்கள் விருது பெற்ற திரு மாதவன் திரு இராஜ துரை நாகர்கோயில் நூலகர் திரு சித்திரைலிங்கம் யோகா ஆசிரியை திருமதி இராஜலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பவுலின், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் திரு சாமுவேல்ராஜ், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர் திரு பிரேம்குமார், ஆசிரியர் ஜான்சன், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் திரு மகாபால்துரை உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் நூலகர்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் வாசகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலகர் திருமதி இசக்கியம்மாள் நன்றி கூறினார்.