Mon. Jun 30th, 2025

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்களை வெற்றி

தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் சாத்தான்குளம் ஒன்றிய பள்ளிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நாட்டுபுறத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரஞ்சித் சாரா அவர்கள் கூறுகையில் வட்டார அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் பங்கேற்க தேர்வு பெற்றனர்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இம் மாவட்ட அளவிலான போட்டிகளில் சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அம்மா அவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு மாவட்டத்தின் சார்பாக அனுப்பப்படுவர் என தெரிவித்தார்.

தொடக்க நிலை பிரிவில் ஊராட்சி ஒன்றிய பள்ளி மறக்குடியை சார்ந்த இந்துஜா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார், திருக்குறள் ஒப்பித்தலில் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சார்ந்த பெருமாள் ஆகாஷ் இரண்டாம் இடம் பெற்றார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் ஒப்புவித்தல் போட்டியில் தட்டார்மடம் புனித அன்னாள் துவக்கப்பள்ளி மாணவர் பாலா ஸ்ரீ, ஆங்கில பாடல் பிரிவில் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி சொக்கன் குடியிருப்பை சார்ந்த ஆண்டனி லக்ஷின், அதே பள்ளியை சார்ந்த மில்கி சுஜித் பேச்சு போட்டியிலும் மாறுவேட போட்டியில் தட்டார் மடம் புனித அன்னாள் தொடக்கப்பள்ளி மாணவன் ரியாசின் ரித்தீஷ் தேவ் முதலிடம் பெற்றனர். மேலும் பெரியதாழை ஆர்.சி தொடக்கப்பள்ளி மாணவி கேத்தரின் மெல்லிசை போட்டியில் இரண்டாம் பரிசு அப்பள்ளி மாணவர்கள் பரதநாட்டிய குழு இரண்டாம் இடம் பெற்றனர்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பிரிவில் சத்திய நகரம் நடுநிலைப் பள்ளியை சார்ந்த மாணவன் முத்து ஈஸ்வரன் பல குரல் பேச்சில் மூன்றாம் இடம் பெற்றார். தனிநபர் நடிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஞானியார் குடியிருப்பை சார்ந்த சுபாஷ் என்ற மாணவன் மூன்றாம் இடமும், குழு பரதநாட்டிய பிரிவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உயரத்துக்கு குடியிருப்பு மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றனர்.

ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு பிரிவில் SSN கொம்மடிக்கோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரி சுதன் காகித கூழ் பொருட்கள் செய்வதில் முதல் பரிசும் அரசு மேல்நிலைப்பள்ளி படுக்கப்பத்து மாணவர்கள் வில்லுப்பாட்டு மற்றும் தெருக்கூத்தில் இரண்டாம் இடமும் பெற்றனர். புனித மேரி மேல்நிலைப் பள்ளி மாணவன் ஜெபஸ்டின் கல்யான்ராஜ் காகித கூழ் பொருட்கள் செய்வதில் மூன்றாம் இடம் பிடித்தார். பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் கீபோர்டு வாசித்ததில் இரண்டாம் இடமும் அப்பள்ளி மாணவர்கள் நீதி நாடகத்தில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

மேல்நிலைப்பள்ளி பிரிவில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நீலா அனிதா ஈஸ்வரி நாட்டுப்புறப்பாடலில் முதலிடம் பெற்றார். SSN கொம்மடிக்கோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோஸ்னா செவ்வியல் இசை மற்றும் கீபோர்டு வாசித்தலில் இரண்டாம் இடம் பெற்றார். கொம்பன் குளம் மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவா கீர்த்தி ஈஸ்வரன் காகித கூழ் பொருள் தயாரித்தலில் மூன்றாம் இடம் பெற்றார். சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வீதி நாடகத்தில் இரண்டாம் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவி இந்துஜா தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வென்று மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி இந்துஜாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெனட் ரோஸ் ஆலிஸ், ஆசிரியர் பெருமாள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர். தகவல் அறிந்த படுக்கப்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி சரவணன் பள்ளிக்கு வருகை தந்து மாணவியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.

Related Post