



சாத்தான்குளம் எலியட் டக்ஸ்போர்டு தொடக்கப்பள்ளியில் மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவின் 136 வது பிறந்தநாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் ஹர்பான்சிங் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆசிரியர் டயானா செல்லம்மாள் வரவேற்றார்.
பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுபி, விக்கி, தயான், சுரக்சா, ஜெரோலின், ஜோஸ்வின் ஆகியோர் வெற்றி பெற்று பரிசு பெற்றனர். பொது அறிவுப் போட்டியில் ரேயான் அன்றன், ஜெரோலின், மகா சூரிய பிரகாஷ், ஜெஃப்லின் தீப ஹெப்சி உள்ளிட்டோர் பரிசு பெற்றனர்.
மிகச் சிறந்த ஓவியங்கள் வரைந்த ஜெஃப்லின் தீப ஹெப்சி கௌரவிக்கப்பட்டார்.

வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகாபால்துரை சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.
செல்வி சந்திராரஞ்சிதம் நன்றி கூறினார்.
இவ்விழாவில் சத்துணவு அமைப்பாளர் ஜெப ராணி உதவியாளர் ஜெயபதி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அலிஸ் பொன்மலர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.