Mon. Jun 30th, 2025

சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் இரவு நேரத்தில் இயங்கிய  கல் லாரிகளை சிறைப் பிடித்த ஊர் பொதுமக்கள்

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

புதிய கல்குவாரி தொடங்க அனுமதி வழங்க கூடாது என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள கல்குவாரிகளின் அவர்களின் ரத்து செய்ய வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதாகவும், வீடுகளில் விரிசல் விழுவதாகவும், வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கல்குவாரிகள் மாலை ஆறு மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நெடுங்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிகளில் இருந்து இரவு எட்டு மணிக்கு மேல் அனுமதி இன்றியும் அளவுக்கு அதிகமாகவும் கற்களை ஏற்றி வந்த நான்கு லாரிகளை நெடுங்குளம் பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர்கள் வந்து லாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்வதாகவும், இனிமேல் இது போன்று நடக்காது என்று  மக்களிடம் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Related Post