Mon. Jun 30th, 2025

தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 200 பேர் கைது

திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சிதம்பர நகரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அனுமதி இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Post