Mon. Jun 30th, 2025

செய்துங்கநல்லூரில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

வக்ப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மற்றும் மத்திய அரசை கண்டித்து செய்துங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இம்ரான், பொருளாளர் ரஷீத்காமில், துணைத்தலைவர் தமீம்அன்சாரி, துணை செயலாளர்கள் இமாம்பரீது, அசாருதீன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திருப்பபெற வலியுறுத்தி பேசியதாவது, வக்ப் வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்டுள்ள நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். வக்ப் வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும்வரை எங்களது போராட்டங்களும் தொடரும் என்றார்.

இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர்அராபத், வர்த்தக அணி செயலாளர் சிக்கந்தர்மீரான், செய்துங்கநல்லூர் கிளை தலைவர் சாதிக், செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் கரீம்பாட்ஷா, துணைத்தலைவர் வாசிம், துணைச்செயலாளர் அப்துல்கனி, மருத்துவ அணி சையதுஇப்ராஹிம், மாணவரணி நவ்பல், தொண்டரணி ஹம்ஸா, வர்த்தக அணி ஆபிதீன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தலைவர் நவாஸ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Post