சாத்தான்குளத்தில் மூத்த பத்திரிகையாளர் மகராசன் மறைவை யொட்டி அவருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
சாத்தான்குளத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக தினகரன் நாளிதழ் மற்றும் மாலை முரசு, தமிழ் முரசு, தினமலர் நாளிதழில் பணியாற்றியவரும், மாலைமலர் நிருபராக இருப்பவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டமைப்பு தலைவர், மதிமுக மாவட்ட கழக இலக்கிய செயலாளரும் சமூக ஆர்வலராக ச மகராசன் கடந்த இருபத்தி எட்டாம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
அவருக்கு பத்திரிக்கையாளர்கள் சமூக அமைப்புகள் சார்பில் இரங்கல் கூட்டம் இன்றுறு நடந்தது.
காமராஜர் நினைவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவரும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ எஸ் ஜோசப் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஆ.க. வேணுகோபால் வரவேற்றார்.

இதில் வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமண்டச் செயலாளர் பால் துறை, நாடகக் கலைஞர் ஞானபிரகாசம், ஐ என் டி யு சி காங்கிரஸ் பொதுச்செயலாளர் லூர்து மணி, புன்னகை தேசம் கட்சி தலைவர் அந்தோணி ராஜசிங், ம திமுக நகரச் செயலாளர் ஜெயராஜ், பாரதிய மஸ்தூர் நகை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் மூக்காண்டி, சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் கண்ணன், செயலாளர் மதுரம் செல்வராஜ், நிருபர்கள் காளிதாஸ், கவிதன், முருகன், சிதம்பரம் மணிகண்டன், ஐ ஜே கே கட்சி பேச்சாளர் படம் பரமசிவம், ஓய்வு பெற்ற தாசில்தார் நடராஜன் ஆகியோர் மறைந்த மகராஜனுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.
இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், நிருபர் தினகர், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட மகாராஜன் உறவினர்கள் கலந்து கொண்டனர். மகாராசன் மகன் கார்த்திக் நன்றி கூறினார்.