Mon. Jun 30th, 2025

மேரி இமாக்குலேட் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம், அக்:26, புதுக்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி ஆகியோர் உத்தரவின் பேரில் றிஎப்ஒய்பி 2.0 எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக சாத்தான்குளம் அருகே புதுக்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை.ரூபர்ட் தலைமை வகித்து பேசினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் வரவேற்றார். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர்.வேணுகா விளக்கமாக பேசினார். புகைப்பிடித்தல் தடுப்பு சட்டம், அபராதம் குறித்து சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன் பேசினார். சித்த மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஜெகதீஷ் குமார், டாக்டர் வைகுண்டரமணி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஜெயபால் நன்றி கூறினார. மாணவர்களின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. முடிவில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் அகிலன், அருண், சுதன் உட்பட ஏராளமான மாணவ மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Post