Tue. Sep 17th, 2024

நாகர்கோவிலில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று (24.08.24) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு. தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் அடங்கிய புதிய உறுப்பினர் அட்டை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் சனிக்கிழமை அன்று குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான அதிமுக புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து எம்எல்ஏ தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது இதில் மாநகர பகுதி கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினர் மேலும் கூடலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலன் அவர்களும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்

Related Post