முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் புதூர் பிரிவில் காட்டுவளவு திமுக கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திமுக மேயர் தினேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பாண்டி, நிருபர், திருப்பூர்