தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவருக்கு சொந்தமான தோட்டமானது பனைக்குளம் குளத்திற்கு தெற்கே உள்ளது. மேற்படி வயலில் நெல் சாகுபடி செய்திருந்தார்.
இன்று மதியம் இரண்டு மணியளவில் காற்று வீசியபோது மின் வயர்கள் உரசி தீப்பொறி பறந்தது. தீப்பொறியானது நல்ல முறையில் விளைந்து இருந்த நெற்கதிர்கள் மேல் விழுந்து தீப்பிடித்தது. இதனை கண்ட அங்கிருந்த விவசாயிகள் உடனடியாக செயல்பட்டு மின்சாரத்தை நிறுத்தி விட்டு தீயை அணைத்தனர்.
தீயினால் சேதமடைந்த நெருப்பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தீயினால் பாதிக்கப்பட்ட இடத்தினை கரூரில் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி அவர்கள் பார்வையிட்டார்