சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் சுற்றி திரிந்த மானை பொதுமக்கள் மீட்டுபாதுகாத்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் டி. ஆர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது அப்பகுதியில் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.
அதனைப் பார்த்த தெரு நாய்கள் மானை துரத்தி உள்ளது.
இதனையடுத்து தர்மராஜ் மற்றும் பொதுமக்கள் மானை துரத்திய நாய்களை விரட்டி விட்டு மானை பத்திரமாக பிடித்து கடையில் அடைத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். வனத்துறையினர் வந்து மானை மீட்டு செல்வதாக தெரிவித்து உள்ளனர். மேலும் வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்
பேய்க்குளத்திற்கு வந்த வந்த மானை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த மான் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மான் சரணாலய பகுதியில் இருந்து தவறி இங்கு வந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்