Mon. Sep 16th, 2024

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்திடக்கோரி, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்குமாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஸ்ரீவை காசிராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் கருப்பசாமி வரவேற்றார்.

இதில், ஸ்ரீவை நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சொர்ணபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்ராஜ், ரமேஷ், வாசுகிநடராஜன், மாவட்ட பிரதிநிதி மீன்தங்கராஜ், முன்னாள் நகர செயலாளர் பால்துரை, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல தலைவர் எட்வர்டு அந்தோணிராஜ், மண்டல துணை செயலாளர் ஜேசுபாதம் தாவீதுராஜா, பணிமனை தலைவர் லட்சுமணன், செயலாளர் மாரியப்பன், எஸ்.இ.டி.சி. வேம்பு, முன்னாள் தொகுதி இணை செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரியார், நகர எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சேர்மதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Post