Mon. Sep 16th, 2024

ஸ்ரீவைகுண்டம் கருவூலத்தில் புதிய அதிகாரி பொறுப்பேற்றார்


ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக காலியாக இருந்து வந்தது.

இதனால், ஓய்வூதியர்கள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
காலியாக இருந்த இந்த பணியிடத்தை உதவி கூடுதல் அலுவலரான சிவனுப்பாண்டியன் கூடுதலாக பொறுப்பு எடுத்து கவனித்து வந்தார்.

இந்நிலையில், அரசின் உத்தரவின்பேரில் புதியதாக நியமிக்கப்பட்ட சங்கர் உதவி அலுவலராக பொறுப்பேற்றார்.

புதிய உதவி கருவூல அலுவலர் சங்கருக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, பொருளாளர் சீனிப்பாண்டியன், நிர்வாகிகள் ராஜதேவமித்ரன், குருசாமி, பெருமாள் மற்றும் உதவி கூடுதல் கருவூல அலுவலர் சிவனுப்பாண்டியன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Post