Tue. Sep 17th, 2024

சாத்தான்குளத்தில் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை – போலீசார் விசாரணை


சாத்தான்குளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்


சாத்தான்குளம் வீர குமார பிள்ளை தெருவை சேர்ந்தவர் வேத முத்து மகன் செல்லையா வயது 58. இவரது மனைவி சரோஜா கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவரது மகன் துரை திருமணம் ஆகி கோவையில் இருந்து வந்தார். தற்போது ஊருக்கு வந்து உள்ளார் செல்லையா.

உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஊர் திரும்பினார்.

வழக்கம்போல் கரையடி சுடலை மாடசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே படுத்து உறங்குவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு கோயிலில் படுத்து உறங்க சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை செல்லையா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், ஸ்டீபன் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் இருந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்லையா எதற்காக கொலை செய்யப்பட்டார் அவருக்கும் வேறு யாருக்கும் முன் விரோதம் உள்ளதா என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Post