Mon. Sep 16th, 2024

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா   நடைப்பெற்றது.

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா   நடைப்பெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. டாக்டர் ஸ்டீபன் தலைமையேற்று சிறப்பாக சிறப்புரையாற்றி விழாவினை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி  மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு. பன்னீர் செல்வம் மறைமாவட்ட பொருளாளர் பேரருட்திரு  சகாயம்; மறைமாவட்ட செயலாளர் பேரருட்திரு ஜாண்செல்வம் அனைவரும் முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை ஜேசுராஜா  அனைவரையும் வரவேற்றார்.  பெற்றோர் ஆசிரியர் கழக குழு உறுப்பினர்கள் கிறிஸ்டோபர், இளங்கோ, ஜீவா மேதகு ஆயர் அவர்களுக்கு நினைவு பரிவு வழங்கினார்.   தேச பக்தியை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் விதமாக எம் பள்ளியின் ஆண்டு விழாவின், தேச ஒற்றுமை தேசிய கொடி, தேசிய சின்னங்கள் புளி, மயில், தாமரை இலைகளை மையப்படுத்தி நடனம், இந்திய இராணுவம் பற்றிய மௌன மொழி நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் அனைவரும் ஈடுப்பட்டனர். அவர்களின் பங்களிப்பால் நிகழ்ச்சிகள் தேச ஒற்றுமையினை விளக்கும் வகையில் இருந்தன. மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி தலைமையாசிரியர்கள் அரசாங்க பிரமுகர்கள் உதவியாளர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.  பள்ளி தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை பேட்ரிக் அந்தோணி விஜயன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்திருந்தார். விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஐவன் சுனில் நன்றி கூறினார்.

Related Post