Thu. Jan 15th, 2026

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாட்டம்

தேசிய இரட்டையர்கள் தினம்.
சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலேயே அதிகமான இரட்டையர்கள், 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக, அதில் 7 ஜோடி சகோதரர்களும், 3 ஜோடி சகோதரிகளும், 2 ஜோடி சகோதர சகோதரிகளுமாக கல்வி பயின்று வருகிறார்கள். அவர்களை தலைமையாசிரியர் முனைவர் செல்லப்பாண்டியன் அவர்கள் இன்று இரட்டையர்கள் தினம், மற்றும் இரட்டையர்கள் உருவாகும் விதம் போன்றவற்றை எடுத்துறைத்து வருங்காலங்களில் இரட்டையர்களாக அரசு வேலைகளில் பிரகாசிக்கவேண்டும் என , இரட்டையர்களுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்சியில் உதவி தலைமையாசிரியர்கள் விஜயராணி, வளர்மதி ராஜபாய், மற்றும் அறிவியல் ஆசிரியர் லயன் டேனியல், அக்னஸ், ஜாய்ஸ் பாப்பா, ஸ்டீபன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இரட்டையர்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.

Related Post