மீஞ்சூர் அடுத்த மேலூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பட்ட மந்திரி வரை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பின்னர் வல்லூர் கூட்டு சாலையில் கல்வி சீர் வழங்கும் விழா பரதநாட்டியத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பரை இசைத்தல், சிலம்பாட்டம் குத்துச்சண்டை, போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்கள் மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சு நடைபெற்றது.

அக்னி சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அன்பாலயா சிவகுமார். ஆதித்தமிழன் இளஞ்செழியன்,தமிழ் ஆசிரியர் அர்ஜுனன் உதவி ஆய்வாளர் கல்பனா தேவி, அண்ணாதுரை சங்கர் ரூபன் நாகராஜ் தமிழ்ச்செல்வன் ஜான் மற்றும் மேலூர் பைந்தமிழ் கால்பந்து குழுவினர் கலந்து கொண்டு கல்வி சீரினை வழங்கினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.