Mon. Jun 30th, 2025

நாசரேத் பஜார் கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை – 25 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

நாசரேத் பஜார் கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீரென பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டனர்.
நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட கேவிகே சாமி சிலையில் இருந்து சந்தி பஜார் வரையிலும் உள்ள 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டனர்.

நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் திருவடிவாசன், இளநிலை உதவியாளர் ராம்முருகன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 25 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்ததோடு கடைக்கு ரூ‌.500, 1000/, 2000/ வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பை க்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது‌.

இதையடுத்து நாசரேத் பேரூராட்சி 5 வது வார்டு மணிநகரில் நெகிழி சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது‌. பேரணி முக்கிய வீதியாக சென்றது.

பேரணியில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பையை ஒழிப்போம் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இடங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்‌. இதில் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *