Sun. Jun 29th, 2025

நாசரேத் பேரூராட்சி திருவள்ளுவர் காலணியில்  அங்கன்வாடி மையம் திறப்பு விழா 

நாசரேத் பேரூராட்சி திருவள்ளுவர் காலணியில்  அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.

நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு திருவள்ளுவர் காலணியில் புதிதாக  நமக்கு நாமே திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில்  சிறுவர் பூங்காவுடன் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.  

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம்  அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து மையத்தில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றினார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார்,  பேரூராட்சி கவுன்சிலர்கள்  எட்வர்ட் கண்ணப்பா, ஜேம்ஸ், சாமுவேல்,   அதிசயமணி, ஐஜினஸ்குமார் , ரவீந்திரன், செளந்திரம்,  ஸ்டெல்லா, அனி, ரதி ,ஜெயா, பெனிட்ரோ, மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குழந்தை வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் நிலை_2 எஸ்தர் ராஜாமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் எக்கோலியா, அங்கன்வாடி பணியாளர்கள் வசந்தகுமாரி, ஜெயந்தி, அங்கன்வாடி உதவியாளர் கீதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். 

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post