சாத்தான்குளம் அருகே சண்முகநகரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் சுரேஷ் (36) என்பவர் இன்று மாலை சுமார் 5 மணியளவில் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுபோல் வேலவன்புதுக்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நல்லகண்ணுதேவர் மகன் பரமசிவம் வயது (45) என்பவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்
இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்படி இருவரின் உடல்களும் பிரேத மருத்துவ பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரப்பட்டது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமணையில் குளிர்சாத பெட்டி வசதி கிடையாது காரணத்தினால் சாத்தான்குளம் வர்த்தக சங்கத்தினர் குளிர்சாதன பெட்டி ஏற்பாடு செய்து தருவதாக கூறி அங்கு வந்தனர்.
இந்நிலையில் குளிர்கால பெட்டிக்கு மின்சாரம் வழங்க முடியாது என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக இருவரது உடலிலும் ஒரே அமரர் உர்தியில் ஏற்றி திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு மீரான்குளத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அப்போதும் குளிர்சாதன பெட்டிக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மின்சாரம் வழங்க மறுத்த காரணத்தினால் காவலர் குடியிருப்பு மின்சாரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தபோது பொதுமக்கள் மத்தியில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஊழியர்களின் மீது எதிர்ப்புகள் கிளம்பியது.
மேற்படி சம்பவம் நடந்த சில தினங்களுக்குள் மீண்டும் பிணவறைக்கு மின்சாரம் வழங்க மறுத்த மருத்துவமனை ஊழியர்கள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன வசதியும் மின்சார வசதியும் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்