சாத்தான்குளம் அருகே சண்முகநகரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் சுரேஷ் (36) என்பவர் இன்று மாலை சுமார் 5 மணியளவில் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை முயன்றுள்ளார்.
மேற்படி நபரை அவரது தாயார் மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மேற்படி நபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டார்.
மேற்படி நபர் அவரது சகோதரருடன் டீக்கடை மற்றும் காலை உணவகம் நடத்தி வந்துள்ளார். மேற்படி நபருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.