சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமம், வேலவன்புதுக்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நல்லகண்ணுதேவர் மகன் பரமசிவம் வயது (45) என்பவர் இன்று மாலை சுமார் 4.00 மணியளவில் அவரது தோட்டத்தில் வைத்து பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது மனைவிக்கு போன் செய்து தான் பூச்சி மருந்து அருந்திவிட்டதாக கூறியுள்ளார்.
மேற்படி நபரை தேடி அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். அவர் தோட்டத்துக்கு அருகில் உள்ள குளத்துகரையில் மயங்கிய நிலையில் உள்ளதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேற்படி நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்படி நபருக்கு திருமணம் ஆகி ராதா என்கிற மனைவியும் 1ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளன. மேற்படி நபர் தினமும் மது அருந்துவதால் அவரது மனைவிக்கும் அவருக்கும் குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்து அருந்தி உள்ளார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்