Mon. Jun 30th, 2025

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையம் சார்பில் பள்ளிக்கு நிதியுதவி

புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பாக ரூ.14.78, இலட்சம் மதிப்பில் மாணவர்கள் பல்நோக்கு அரங்கம், இரண்டு புதிய கழிப்பறைகள் கட்டுதல், இரண்டு புதிய இரண்டு சிறுநீர் கழிப்பறைகள் கட்டுதல், நான்கு பழைய கழிப்பறைககள் பழுது பார்த்தல், நடைபாதைகளில் தள கற்கள் பதித்தல், பத்து நல்லியுடன் கூடிய கை கழுவும் இடங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிக்கு மக்களின் பங்களிப்பு 15% தொகையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் மூலம் காசோலையாக நேற்று இயேசுவிடுவிக்கிறார் ஊழியத்தின் பொதுமேலாளர் செல்வகுமார் வழங்கினார்.

இதற்கு நிர்வாகத்தின் சார்பில் பள்ளியின் கோரிக்கையினை ஏற்று பள்ளியின் வளர்ச்சிக்காக நல்ல உள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய மோகன் சி. லாசரஸ், மற்றும் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்திற்கு புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் இப்பணிக்கு புறையூர் வெல்ஃபர் டிரஸ்ட் மூலமாக ரூ.50ஆயிரம் காசோலை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445666

Related Post