பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது
இதையொட்டி ஆலயத்தில் ஞாயிறு சிறப்பு ஆராதனையும், பரிசுத்த நற்கருணை ஆராதனையும் நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து சுற்றுச்சூழல் தினத்தை மேன்மைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு செய்தி கொடுத்து ஆராதனையை நடத்தினார்.
ஆராதனையில் சபை மக்கள் திரளானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் மரக்கன்று வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு. டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 175 க்கு மேற்பட்ட மக்களுக்கு சந்தன மரக்கன்று வழங்கப்பட்டன.
இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஷம்மா அகஸ்டின், திலகர், சபை மூப்பர்கள் கோயில்ராஜ், சாமுவேல், சபை ஊழியர்கள் டேனியல் ஆசீர்வாதம், டென்சிங் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655