Mon. Jun 30th, 2025

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக கல்லூரி சிவில் துறைத் தலைவர் ரஞ்சன் குனராஜ் ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் இறைவணக்கப் பாடல் பாடினர். அமைப்பியல் துறைத் தலைவர் சோபியா ஜெபர்சன் வேத பாடம் வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் முனைவர் ரமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து விரிவுரையாளர்கள் வினோத், பிரவின்குமார், ஜெசிந் பிரவின் ஆகியோர் சிறப்பு பாடல்கள் பாடினர். கல்லூரியின் ஒழுங்கு முறைகள் குறித்து இயந்திரவியல் துறைத் தலைவர் பிரபாகர் வேத சிரோன்மணி புதிய மாணவர்களுக்கு எடுத்து கூறினார். வேலைவாய்ப்புகள் குறித்து ஆட்டோமொபைல் துறை விரிவுரையாளர் லிவிங்ஸ்டன் நவராஜ், கல்வி உதவி தொகை பற்றி ஜான் வெஸ்லி மற்றும் பேருந்து வசதி குறித்து மர்காசிஸ் மோசஸ் ஆகியோர் பேசினர்.

நிறைவாக கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். மின்னனுவியல் துறைத் தலைவர் பெனிட்டா ராஜு நிறைவு ஜெபம் செய்தார். விரிவுரையாளர் ஜான் விலிங்டன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 2025 – 26 கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகியின் ஆலோசகருமான ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் தலைமையில் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், கம்ப்யூட்டர் துறைத் தலைவர் பிரபாகர், எலக்ட்ரிக்கல் துறைத் தலைவர் சிவமுருகன், ஸ்டாலின், சாமுவேல்ராஜ் உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post