Mon. Jun 30th, 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீர்நிலை பாதுகாவலர் விருது தமிழக முதல்வர் வழங்கினார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது

நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்த கிராமியம் தொண்டு நிறுவன தலைவர் நாராயணன் அவர்களுக்கு சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதும், ஒரு லட்சம் ஊக்க தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசின் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுப் பெற்ற  நாராயணன் அவர்களுக்கு இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்
(ஐசிடபிள்யு) சார்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இதன் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் பொன்னாடை அனிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிராமியம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிர்வாகிகள், சமூகப்பணி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராமியம் தொண்டு நிறுவனத் தலைவர் நாராயணன் தெரிவித்ததாவது கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிராமியம் நிறுவனம் சமூக சேவை, கல்வி, சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகவும் நீர் நிலைகளை தேக்கி விவசாயத்திற்கு தேவையான யுக்திகளை கையாண்டு விவசாயத்தை பெருக்கி உள்ளதாகவும், பல கிராமங்களில் நற்பணிகளை செய்து வருவதால் தமிழக அரசு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கியுள்ளதாகவும் அனேக இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post