பொன்னேரி தொகுதி திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்
கழக பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ. ராசா தலைமையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் முன்னிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் பேசுகையில் மீஞ்சூர் வெளிவட்டச் சாலை முதல் செங்குன்றம் வரை அரசு பேருந்து வசதி செய்து தரவும் மீஞ்சூர் மற்றும் பூவிருந்தவல்லி வரை அரசு பேருந்து வசதி அமைத்து தரவும் மீஞ்சூர் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை அரசு பேருந்து வசதி அமைத்து தரவும் மீஞ்சூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை மிக விரைவில் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் கோரிக்கை வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்