நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும், ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார்.
தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் மற்றும் பசுமை மன்ற பொறுப்பாசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணி, பள்ளியில் துவங்கி, மரகாஷிஸ் சாலை, லூக்கா மருத்துவமனை, வாரச்சந்தை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது.
மரம் வளர்ப்போம், இயற்கையை காப்போம், நீர் வளம் பாதுகாப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கொண்டு சென்றனர்.முன்னதாக, காலை கூடுகையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. தேசிய பசுமை படை மற்றும் பசுமை மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் உடற்கல்வி ஆசிரியர் தனபால், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர் 94 87 44 56 55