Mon. Jun 30th, 2025

பொன்னேரி திருவேங்கடபுரத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் என்ற (உப்பரபாளையம்) கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

கும்பாபிஷேக விழா ஏற்பாட்டை கோவில் தர்மகர்த்தா நித்திய குமார், வாசு,  திருநாவுக்கரசு, மற்றும் கோவில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்பாக கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்தனர்.

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post