தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை,திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மே 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் கிராம கிராமங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மீஞ்சூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்களான நாலூர், வன்னிப்பாக்கம், மீஞ்சூர், மீஞ்சூர் 2, நந்தியம்பாக்கம் அரியன் வாயல், வெள்ளம்பாக்கம், கொள்ளட்டி, கல்பாக்கம், வல்லூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு 2, உள்ளிட்டவைகளுக்கு ஜமாபந்தி நடைபெற்றன
இதில் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 30 வருட காலமாக வசித்து வருவதாகவும் இதில் 546 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வேண்டி தாலுக்கா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு அதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன
அப்பணிகளை மேலும் துரிதப்படுத்தி விரைவாக செய்திட வேண்டுமென ஜமாபந்தி வருவாய் தீர்வாய அலுவலரை நேரடியாக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம். டி.ஜி.கதிர்வேல் அணுகி கோரிக்கை மனுவை அளித்தார்
வட்டாட்சியர் சோமசுந்தரம்,பேரிடர் மேலாண்மை பிரிவு வட்டாட்சியர் மதன், கலால் வட்டாட்சியர் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், துணை வட்டாட்சியர் பாரதி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்