தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் தங்களது வழித்தடத்தில் இயங்காமல் நேர்வழியில் இயங்குவது குறித்தும், அனைத்து கால நேரங்களில் பேருந்துகள் இயங்காதது குறித்தும் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன

இந்நிலையில் திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் அவர்கள் பேய்க்குளத்தில் வைத்து தனியார் பேருந்துகள் முறையாக இயங்குகிறதா என்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து தனது வழித்தடத்தில் இயங்காமல் பேய்க்குத்தில் நிறுத்தி வைக்கப்படுவது தெரிய வந்தது.
மேற்படி பேருந்து பேய்க்குளத்திற்கு ஒரு மணி நேரம் கால தாமதமாக வந்த போது, அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்த திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் அவர்கள் பேருந்தினை ஆய்வு செய்தனர்.

நாசரேத் வரை செல்ல வேண்டிய தனியார் பேருந்து, நாசரேத் வரை செல்லாமல் பேய்க்குளம் பெயர் பலகையுடன் வந்ததால், ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து அனைத்து வழித்தடங்களிலும் கால நேரத்தில சரியாக இயக்க வேண்டும் எனவும், தற்போது உடனடியாக நாசரேத் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி பேருந்தினை நாசரேத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஏற்கனவே தனியார் பேருந்துகள் மீது புகார்கள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து தனியார் பேருந்தின் வழித்தடத்தில் இயங்க வைக்க திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் பல பேருந்துகள் தனது வழித்தடத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தனியார் பேருந்து மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து நாசரேத்திற்கு இயங்க வைத்த திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் அவர்களை பேய்க்குளம் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்