நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி றிஎன்டிறிஏ துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியை சாந்தி அல்பர்ட் தலைமை வகித்து மாணவ_ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சீருடை, விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதையடுத்து அனைத்து மாணவ_ மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. இதில் உதவி ஆசிரியை சாந்தி ஜெயசீலி மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர் 9487445655