ஆழ்கடல்மீன்பிடி தடை காலம் இருப்பதால் கடல் மீன் குறைவாக காணப்படுகின்றன இதனால் ஏரி மீன்களுக்கு அசைவ பிரியர்கள் திரும்பி உள்ளனர் வியாபாரிகள் ஏரிகளில் பிடிக்கப்படும் மீன்களை அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர்
இந்நிலையில் புழல் ஏரி சோழவரம் ஏரிகளில் மீன்பிடிப்பவர்கள் அதிகமாக மீன்களை பிடித்து வருகின்றனர் பொன்னேரி அடுத்த சோழவரம் ஏரி 680 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளங்கள் மட்டும் சேமிக்கப்பட்டு சென்னை பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த ஏரியில் காணப்படும் மீன்கள் சுவையாக இருப்பதால் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் கடும் கராக்கி நிலவி வருகிறது வில்லிவாக்கம் வண்டலூர் கோயம்பேடு அண்ணா நகர் குரோம்பேட்டை ராணிப்பேட்டை, நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர், வில்லிவாக்கம் சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஏராளமான பேர் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் வந்து வாங்கி செல்வதுண்டு
மேலும் த்ரீ ஸ்டார் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு புழல்,சோழவரம் ஏரி மீன் வியாபாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதால் மீன்பிடி தொழில் அதிகமாக நடைபெறுகிறது
இந்நிலையில் சோழவரம் அடுத்த காரனோடை மீன் மார்க்கெட்டில் சோழவரம் ஏரியில் பிடித்த மீன்களுக்கு தனி மவுசு உண்டு ஜிலேபி,கிலோ 150-200,கட்லா கிலோ 300,,கெண்டை 200,,கெளுத்தி 200,சொட்டை வாலை,250, உழுவை 200,, விரால்கிலோ 500 முதல் 600 வரை வவ்வால் கிலோ 300 லோகு 200 முதல் 300 வரை பில்லுகெண்டை கிலோ 200 ஏரி இறால் 300,நெத்திலி 100, பித்தலகாசி பன்னீர் சொட்டை, சாணி கண்டை விற்பனை செய்யப்படுகின்றன
தற்போது சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மீன் பிரியர்கள் ஏரி மீனை வாங்கி செல்கின்றனர், நேற்று முதல் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்