சுதந்திர போராட்ட தியாகி தென்னகத்து ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளின் ஜூன் 1 ல் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது
இதில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரபு இணைச் செயலாளர் டில்லி பாபு மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்
நிர்வாகிகளிடையே பேசிய மாவட்ட செயலாளர் விஜயகுமார் 2026-ல் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமைய பாடுபட வேண்டும் எனவும் அதற்காக முழு வீச்சில் நிர்வாகிகள் பாடுபட வேண்டும் எனவும் ஒரே குறிக்கோள் வெற்றி நமதே, என செயல்பட வேண்டுமென தெரிவித்தார்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்