Mon. Jun 30th, 2025

மீஞ்சூர் அருகே ஸ்ரீபகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தின விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு மகா உற்சவ திருமஞ்சனம் நடைபெற்றது

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேல தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஜீயர் உ வே சுதர்சன நாச்சியார் சாமிகளால் அணிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிறப்பு ஆராதனை நடத்தி வழிபாடு செய்தனர்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீனிவாசர் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ யோக நரசிம்மரை
தரிசனம் செய்தனர்.

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post