திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு-தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி ஏரிக்கரை வரையிலான 1200 மீட்டர் சாலை ஆனது. கடல் அரிப்பின் காரணமாக சேதம் அடைந்தது
சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் இருந்ததால் அவ்வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்,

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று. அதானி துறைமுக சமூக நல மேம்பாட்டு நிதியில் இருந்து 143.75 லட்சம் மதிப்பீட்டில் இதேபோன்று கருங்காலி ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் தார் சாலையும், இதேபோன்று காட்டுப்பள்ளி குப்பம் முதல் சி எஃப் எஸ் வரை சேதமடைந்த 450 மீட்டர் தார் சாலைக்கு பதிலாக அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக அதானி துறைமுக தலைமை அலுவலர் செரியன் ஏபிரகாம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,

மேலும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் நிறுத்தப்படும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக படகு துறைக்கு கொண்டு வருவதற்காக அதானி துறைமுக நிர்வாகம் சார்பில் கடற்கரை மணலில் எளிதாக இயங்கக்கூடிய அதிநவீன புதிய டிராக்டர்ரையும் அவர் மீனவர்களிடம் வழங்கினார்,
இந்த நிகழ்ச்சியில் அதானி துறைமுக அதிகாரிகள், மீனவ கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்