Sun. Jun 29th, 2025

ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் கலைக்கல்லூரி பி.காம் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் பி.காம் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு விழா மலரும் நினைவுகளுடன் கோலாகலமாக நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்களம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் 1997 – 2000ம் கல்வியாண்டில் வணிகவியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளி விழா கொண்டாட்டமாக சந்தித்து மகிழ்ந்தனர்.

வெள்ளி விழாவிற்கு, கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கனகசபாபதி, சுவாமி அய்யப்பன், விஜய் காசிவிஸ்வநாதன், பெருமாள், சுமதி, ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பில், கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.

முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்தினருடன் முன்னாள் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் சந்திரசேகர், தற்போதைய வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் பழனி மற்றும் பேராசிரியர்கள் சாந்தி, மாரியப்பன், கோமதிநாயகம், சரவணன் ஆகியோருடன் வகுப்பறை நினைவுகள் குறித்து கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து, 25வது ஆண்டு வெள்ளிவிழா சந்திப்பிற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு குழு மூலமாக நண்பர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஒவ்வொருவரது குடும்ப நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, நண்பர்களில் தேவையானவர்களுக்கு தகுந்த உதவிகள் செய்தல் மற்றும் ஆலோசனை வழங்குவது குறித்தும் விவாதித்தனர்.

இந்நிகழ்வில், முன்னாள் மாணவ, மாணவியர்களான ஏ.சுப்புலெட்சுமி, கல்யாணி, முத்து, பிரேமா, ராஜேஸ்வரி, எம்.சுப்புலெட்சுமி, சுமதி, ஆறுமுகசாமி, பாலசுப்பிரமணியன், பாலசுந்தரம், சந்திரசேகரன், காசி விஸ்வநாதன், ஜெய் கணேசன், கிருஷ்ணன், குமரேசன், முருகப்பெருமாள், முத்துக்குமார், நாராயணன், பழனி, கனகசபாபதி, விஜய் காசி விஸ்வநாதன், பெருமாள், ராஜேஷ், ராமன், சாமிநாதன், சங்கரநயினார், செல்வமுருகன், செந்தில்குமார், சுவாமி அய்யப்பன், வேல்முருகன் ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளி விழா நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Related Post